Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

தாய்-சேய் அடுத்தடுத்து மரணம்.. அதிர்ச்சியில் உறவினர்கள்.. போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு!!

Sekar Updated:
தாய்-சேய் அடுத்தடுத்து மரணம்.. அதிர்ச்சியில் உறவினர்கள்.. போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு!!Representative Image.

விருதுநகர் மாவட்டத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் மற்றும் அவரது வயிற்றில் இருந்த சிசு உயிரிழந்த சம்பவத்தை அடுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வ.புதுபட்டி எனும் கிராமத்தை சேர்ந்த ராம்குமார் என்பவரது மனைவி அரங்க நாயகி (வயது 19) நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், பிரசவத்திற்காக அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டார்.

நேற்று இரவு அவர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்ட நிலையில், இன்று அதிகாலை 5 மணிக்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் அந்த குழந்தை பிறந்த சிறிது நேரத்திலேயே இறந்தது. 

இதற்கிடையே, அரங்கநாயகியின் உடல் நிலை மிகவும் மோசமானதால் மேல் சிகிச்சைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், செல்லும் வழியிலேயே ஆம்புலன்சில் அரங்க நாயகி உயிரிழந்தார்.

சிசு மற்றும் தாய் என அடுத்தடுத்து உயிரிழந்ததால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள், மருத்துவமனையில் வழங்கப்பட்ட தவறான சிகிச்சையால் தான் இருவரும் பலியானார்கள் என போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவிய நிலையில், போலீசார் வந்து சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்