Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

துப்பாக்கியால் சுட்டு.. மேலும் ஒருவரை காவு வாங்கிய ஆன்லைன் ரம்மி!!

Sekar July 16, 2022 & 15:04 [IST]
துப்பாக்கியால் சுட்டு.. மேலும் ஒருவரை காவு வாங்கிய ஆன்லைன் ரம்மி!!Representative Image.

ஆன்லைன் ரம்மியால் கடன் தொல்லை ஏற்பட்டு மன உளைச்சலில் இருந்து வந்த போலீஸ்காரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு உயிரிழந்துள்ளார்.

கோயம்புத்தூரில் ஆயுதப்படை காவலராக காளிமுத்து என்பவர் பணியாற்றி வந்தார். இவர் ஆன்லைனில் ரம்மி விளையாடி பணத்தை இழந்துள்ளார். எனினும் தொடர்ந்து விளையாடி பணத்தை மீட்டுவிடலாம் என நினைத்து நபர்களிடம் கடன் வாங்கியுள்ளார்.

இதன் மூலம் சுமார் ரூ.20 லட்சம் அளவிற்கு ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த நிலையில், நண்பர்களிடம் வாங்கிய கடனை திருப்பித் தர முடியாமல் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார்.

இந்நிலையில், கோவை பொருட்காட்சியில் பணியில் இருந்தபோது, காளிமுத்து துப்பாக்கியால் தனது வயிற்றில் சுட்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதையடுத்து ரத்த வெள்ளத்தில் மிதந்த அவர் உடனடியாக மீட்கப்பட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

எனினும் சிகிச்சை பலனின்றி அவர் இன்று அதிகாலை உயிரிழந்தார்.ஆன்லைன் ரம்மியால் தற்கொலைகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தமிழக அரசு உடனடியாக அவசர சட்டம் கொண்டுவந்து ரம்மி விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்