Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கோவை மாணவி தற்கொலை வழக்கு - ஆசிரியர் மனைவிக்கு நிபந்தனை ஜாமீன்

Baskaran Updated:
கோவை மாணவி தற்கொலை வழக்கு - ஆசிரியர் மனைவிக்கு நிபந்தனை ஜாமீன்Representative Image.

கோவையில் பாலியல் துன்புறுத்தலால் 12ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கைதான அர்ச்சனாவிற்கு கோவை போக்சோ நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்திரவிட்டுள்ளது.

கோவையில் தனியார் பள்ளி ஒன்றில் 12ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி 2021ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக பணிபுரிந்து வந்த மிதுன் சக்கரவர்த்தி என்பவர் கொடுத்த பாலியல் துன்புறுத்தல் காரணமாக மாணவி கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அந்தக் கடிதத்தில் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி தவிர, தனக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த நபர்களின் பெயர்களையும் குறிப்பிட்டு இருந்தார். இந்நிலையில் மேற்கு அனைத்து மகளிர் காவல் துறையினர் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி, பள்ளியின் தலைமை ஆசிரியர் மீரா ஜாக்சன்,  மாணவியின் வீட்டின் அருகில் வசித்து வந்த மனோஜ் ராஜ் மற்றும் முகமது சுல்தான் ஆகியோரை கைது செய்தனர்.

இந்த வழக்கு கோவை போக்சோ நீதிமன்றத்தில் கடந்த இரண்டு வருடங்களாக நடந்து வந்தது. விசாரணை நடைபெற்று வந்த நிலையில், அரசு தரப்பில் மேலும்  சிலரை கைது செய்யப்பட வேண்டி இருப்பதாக கூறி கடந்த மாதம் நீதிமன்றத்திடம் அனுமதி கேட்டு  மனு தாக்கல் செய்திருந்தனர். நீதிமன்றம் அனுமதி வழங்கி இருந்த  நிலையில், இந்த வழக்கு குறித்து விசாரணை மேற்கொண்டு வந்த மேற்கு அனைத்து மகளிர் காவல் துறையினர் , ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியின் மனைவியான அர்ச்சனாவை கைது செய்தனர்.

தற்கொலை செய்து கொண்ட மாணவியின் செல்போன், காவல் துறையினரால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அதில் டெலிட்டாகி இருந்த ஆடியோ அனைத்தும் தொழில்நுட்ப குழுவினரால் மீட்கப்பட்டதில்,

பாலியல் துன்புறுத்தல் காரணமாக பாதிக்கப்பட்ட மாணவி, ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியின் நடவடிக்கை குறித்து அவரது மனைவியான அர்ச்சனாவிடம் தெரிவித்து இருப்பதும், தொழில் நுட்ப குழுவினரால் மீட்கப்பட்டது. பள்ளி மாணவி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டது,தெரிந்தும் காவல் துறையிடம் தெரிவிக்காததால் அர்ச்சனாவையும் போக்சோ சட்டத்தில்  கைது செய்த அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், அவரை  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், கைதான ஆசிரியர் அர்ச்சனா சார்பில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இதை விசாரித்த நீதிமன்றம் அர்ச்சனாவிற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. 15 நாட்களுக்கு ஒருமுறை மேற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியுள்ளது.  இந்த வழக்கில் கைதான அனைவரும் தற்போது ஜாமீனில் வெளியே உள்ளது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்