பொள்ளாச்சி அருகே தனியார் கல்லூரி மாணவன் விடுதி அறையில் தூக்கிட்டுக் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மனோஜ் என்பவரது 19 வயது மகன் விஷ்ணு, பொள்ளாச்சி உடுமலை ரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் BBA முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்த விஷ்ணு, மாதிரி தேர்வு முடிந்த பிறகும் ஊருக்குச் செல்லாமல் தனது அறையிலேயே தங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று இரவு நீண்ட நேரமாகியும் விஷ்ணு சாப்பிட வராததால் சக மாணவர்கள் அறையின் கதவை தட்டியுள்ளனர். ஆனால் விஷ்ணு கதவை திறக்காததால் சந்தேகம் அடைந்த மாணவர்கள் ஜன்னல் வழியாக பார்த்த போது, விஷ்ணு சடலமாக தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் சார்பில் போலீஸுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் கதவை திறந்து பார்த்த போது மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது உறுதியானது. இதனையடுத்து சடலத்தைக் கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், மாணவன் மரணத்திற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…