திமுக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் கும்மிடிப்பூண்டி வேணு இல்ல திருமண விழாவை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் வைத்து நடத்தி வைத்தார். இத்திருமண விழாவில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா, செய்தித்தொடர்பு துறை தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த திருமண விழா மேடையில் ஆ.ராசா பேசினார்.
அதில், “நாம் அனைவரும் ஒரே குடும்பமாக திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளோம். தமிழ்நாடே ஒரு குடும்பம் என்று அண்ணா கருணாநிதி சொல்லி இருக்கிறார்கள். சில தினங்களுக்கு முன்பு பிரதமர் மோடி பேசும்போது நேரு, கருணாநிதி குடும்பத்தை வீழ்த்த வேண்டும் என்று பேசி உள்ளார்.
பிரதமர் மோடி வரலாற்றை அழிக்க பார்க்கிறார். எந்த இரண்டு குடும்பங்கள் மோடிக்கு எதிரிகளோ அந்த இரண்டு குடும்பங்களான நேரு, கருணாநிதி குடும்பம் சேர்ந்து இந்தியாவில் இருந்தே மோடியை அப்புறப்படுத்துவார்கள்,” என்றார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…