மது போதையில் பேசாம ஒரு இடத்தில உட்காராம பஸ்ல ஏறி, அந்த பஸ் போகாத ஊருக்கு டிக்கெட் கேட்டு பிரச்சனை செய்த போதைக்கார இளைஞன்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்தானது காரவள்ளியை நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து ஏறிய மது பிரியர் ஒருவர் அந்த பஸ் போகாத இடத்திற்கு டிக்கெட் கேட்டு நடத்துனரிடம் பிரச்சனை செய்துள்ளார். அவரும் எவ்ளவோ சொல்லி புரிய வைக்க முயற்சித்துள்ளார். ஆனால் வாக்குவாதம் முற்றி போக நடத்துனரை தாக்க ஆரம்பித்துள்ளார் போதை ஆசாமி.
என்னடா ஓடுற பஸ்ல இப்படி நடக்குதேன்னு மற்ற பயணிகள் பஸ்ஸை நிறுத்துமாறு ஓட்டுனரை வலியுறுத்துள்ளனர். பின்னர் கீழே இறங்கி ரோட்டில் நடத்துனரும், மது பிரியரும் மாறி மாறி தாக்கிக் கொள்ளும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…