Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நாமக்கல்லில் காவிரி-திருமணி முத்தாறு இணைப்பை வலியுறுத்தி மாரத்தான் போட்டி..!!

Sekar Updated:
நாமக்கல்லில் காவிரி-திருமணி முத்தாறு இணைப்பை வலியுறுத்தி மாரத்தான் போட்டி..!!Representative Image.

நாமக்கல் மாவட்ட மக்களின் நீண்ட கால கனவு திட்டங்களில் ஒன்றான காவிரி-திருமணிமுத்தாறு இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி, நாமக்கல் நகரில் வரும் ஞாயிற்றுக்கிழமை டி.எம்.காளியண்ணன் நினைவு மாரத்தான் ஓட்ட பந்தயம் நடைபெற உள்ளது.

சுதந்திர போராட்ட வீரரும், இந்திய அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களில் ஒருவராகவும் விளங்கிய, திருச்செங்கோட்டைச் சேர்ந்த மறைந்த டி.எம்.காளியண்ணனின் 103 ஆவது பிறந்த நாள் விழா, காவிரி- திருமணிமுத்தாறு-சரபங்கா நதி இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தும் விதமாக மாராத்தான் ஓட்டம் மற்றும் நாமக்கல் கொங்கு வேளாளர் சங்கத்தின் 50 ஆம் ஆண்டு தொடக்க விழா என முப்பெரும் நிகழ்வு வரும் ஞாயிற்றுக்கிழமை நாமக்கல்லில் நடைபெற உள்ளது. 

காலை 7 மணிக்கு தொடங்கும் மாரத்தான் ஓட்டப்பந்தயம் குழந்தைகள், மாணவர்கள் மற்றும் பெரியவர்கள் என மூன்று பிரிவாக நடக்கிறது. இதில் மொத்தமாக 1,500 பேர் பங்கேற்கின்றனர். மாரத்தான் ஓட்டப்பந்தயம் முடிந்த பிறகு நாமக்கல்லில் உள்ள கொங்கு திருமண மண்டபத்தில் பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. 

இதில், சிறப்பு விருந்தினராக புதுச்சேரியின் முதல்வர் என்.ரங்கசாமி பங்கேற்கிறார். அவருடன் புதுச்சேரியின் பொதுப்பணித்துறை அமைச்சரான லட்சுமிநாராயணன், தமிழக வனத்துறை அமைச்சர் எம்.மதிவேந்தன், முன்னாள் அமைச்சர் தங்கமணி உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்