Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நாமக்கல் அருகே கோர விபத்து...5 பெண்கள் சம்பவ இடத்தில் பலி...5 வயது குழந்தை மட்டும் மீட்பு

Priyanka Hochumin Updated:
நாமக்கல் அருகே கோர விபத்து...5 பெண்கள் சம்பவ இடத்தில் பலி...5 வயது குழந்தை மட்டும் மீட்புRepresentative Image.

பரமத்தி வேலூர் அருகே காரில் சென்றுக் கொண்டிருந்த 5 பெண்கள் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி பரிதமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்த முழு விவரமும் தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை - வீரப்பூர் பகுதியில் உள்ள புகழ்பெற்ற பொன்னர் - சங்கர் கோயிலில் மாசிபெறு திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் திரண்டு வந்து வழிபாடு செய்கின்றனர். இதில் மிக முக்கியமான நிகழ்வு வேடுபறி வைபவம் நேற்று நடைபெற்றது. அதில் கலந்துக் கொள்ள நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்த 5 பெண்கள் ஒரு குழந்தை உட்பட 7 பேர் காரில் சென்றுள்ளனர்.

அந்த காரை ரவி என்பவரின் மனைவி ஓட்டிச்செல்ல, அவருடன் கந்தாயி, குஞ்சம்மாள், சாந்தி, சுதா ஆகியோர் உடன் சென்றுள்ளனர். கோவிலில் தரிசனம் முடிந்த பின்னர் வீட்டுக்கு திரும்பிய அவர்கள் பரமத்தி வேலூர் அருகே நின்றுக் கொண்டிருந்த லாரி மீது மோதி பெரும் விபத்துக்குள்ளாகியது. அந்த விபத்தில் 5 பெண்கள் சம்பவ இடத்திலையே உயிரிழந்தனர். மேலும் ஒருவர் மற்றும் அந்த 5 வயது குழந்தையும் மீட்கப்பட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்