Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சீமை கருவேல மரங்களை ஏன் அகற்றவில்லை..! - சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்!

Chandrasekaran Updated:
சீமை கருவேல மரங்களை ஏன் அகற்றவில்லை..! - சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்!Representative Image.

தமிழ்நாட்டில் சீமைக் கருவேல மரங்களை அகற்றக் கோரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் தாக்கல் செய்த வழக்குகள், நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தன.

அப்போது அரசுத்தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், தென்காசி மாவட்டத்தில் ஆயிரம் ஹெக்டேர் பரப்பிலும், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் 500 ஹெக்டேர் பரப்பளவிலும் உள்ள சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

சீமை கருவேல மரங்கள் அகற்றும் நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொண்டால் தான் அவை மீண்டும் வளராமல் தடுக்க முடியும். விருப்பமுள்ள தனியார் நிறுவனங்களுடன் சேர்ந்து கருவேல மரங்களை அகற்ற உத்தரவிடப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எந்த பகுதியில் மரங்கள் அதிகமாக வளர்ந்துள்ளது, அகற்றுவதற்கு என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என தெரிவித்த நீதிபதிகள், இதுசம்பந்தமாக குழுக்கள் அமைக்க பிறப்பித்த உத்தரவுகளை ஏன் அரசு அமல்படுத்தவில்லை என அதிருப்தி தெரிவித்தனர்.

சுற்றுச்சூழலை பாதிக்கும் சீமைக் கருவேல மரங்களை அகற்ற நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு அரசு கொள்கை முடிவு எடுத்த போதும், அதுசம்பந்தமாக உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் அமல்படுத்தப்படவில்லை என்பதால் உண்மையில் சீமைக் கருவேல மரங்களை அப்புறப்படுத்துவதில் அரசுக்கு ஆர்வம் இருக்கிறதா? என நீதிபதிகள் சந்தேகம் எழுப்பினர்.

அப்போது குறுக்கிட்ட அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர்,கருவேல மரங்கள் அதிகமுள்ள பகுதிகள் அடையாளம் காணப்பட்டு அதை அகற்றுவதற்கு டெண்டரும் விடப்பட்டுள்ளது. பல இடங்களில் மரங்கள் அகற்றப்பட்டு வருகிறது. உயர் நீதிமன்ற உத்தரவின்படி உரிய குழுக்கள் விரைவில் அமைக்கப்படும் என உத்தரவாதம் அளித்தார்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், குழுக்கள் அமைத்தது குறித்து ஜூலை 5ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். இல்லாவிட்டால் தகுந்த நடவடிக்கையை நீதிமன்றம் தன்னிச்சையாக எடுப்பதை தவிர வேறு வழியில்லை எனவும் எச்சரித்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஜூலை 5ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்