Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தாய் என நினைத்து பேருந்துடன் ஓடிய குதிரை... நெகிழ்ச்சி வீடியோ வைரல்...!

Gowthami Subramani September 13, 2022 & 10:20 [IST]
தாய் என நினைத்து பேருந்துடன் ஓடிய குதிரை... நெகிழ்ச்சி வீடியோ வைரல்...!Representative Image.

பேருந்தில் ஒட்டப்பட்டிருக்கும் குதிரையின் படத்தைப் பார்த்த குட்டி குதிரை ஒன்று தனது தாய் என நினைத்து, பேருந்து பின்னால் ஓடி சென்ற வீடியோ காட்சிகள் காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் பேரூர் பகுதியில் பட்டீஸ்வரர் கோவிலுக்கு அருகே, 10 க்கு மேற்பட்ட குதிரைகள் இருந்து வந்துள்ளது. அந்த பகுதியில் உள்ள புற்களை உணவாக சாப்பிட்டு அந்த பகுதியிலேயே சுற்றி வருகிறது.

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக குதிரைக் கூட்டத்தில் இருந்த தாய் குதிரை ஒன்று, வேறு பகுதிக்கு சென்றுள்ளது. இந்தப் பிரிவைத் தாங்காது குட்டி குதிரை தவித்து வாடிக் கொண்டிருந்தது. ஆங்காங்கே, தாய் குதிரையைத் தேடி அலைந்துள்ளது.

இந்த நிலையில், நேற்று பேரூர் பேருந்து நிலையம் அருகே குதிரை படம் ஒட்டி வைக்கப்பட்ட தனியார் பேருந்து ஒன்று சென்றது. அந்த குதிரையின் புகைப்படத்தைக் கண்ட குட்டி குதிரை தாய் என நினைத்து, பேருந்தையே உற்று நோக்கியது.

பிறகு, பேருந்து எடுத்த பின்பு, அதன் பின்னாலேயே ஓடிச் சென்றுள்ளது. இந்த நெகிழ்ச்சி வீடியோ வலைத்தளத்தில் வெளிதாகி காண்போரை கலங்க வைக்கிறது.

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்