சிவகங்கை மாவட்த்தில் ஏற்பட்ட ஒரு சாலை விபத்தில் புது மாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள ஆவுடை பொய்கை எனும் இடத்தில் திருமணமாகி வெறும் 2 நாட்களே ஆன மதன்குமார் தனது மனைவி நதியாவுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்பொழுது திருச்சியிலிருந்து காரைக்குடி நோக்கி வந்த சொகுசு கார் ஒன்று லாரியை முந்துவதற்கு முயற்சி செய்தபோது எதிர்பாராத விதமாக மதன்குமார் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் புது மாப்பிள்ளை மதன்குமாரும் அவரது மனைவியும் தங்கள் இருசக்கர வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டனர். அக்கம்பக்கத்தினர் உடனடியாக ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்து, இருவரும் காரைக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சில நிமிடங்களிலேயே புதுமாப்பிள்ளை மதன்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மனைவி நதியா உயிருக்கு போராடி வரும் நிலையில், மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
திருமணமான வெறும் இரண்டு நாட்களில் புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…