Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இளைஞர் கொடூர கொலை.. தலையை தேடும் போலீஸ்.. நடுங்கும் மானாமதுரை..

Nandhinipriya Ganeshan Updated:
இளைஞர் கொடூர கொலை.. தலையை தேடும் போலீஸ்.. நடுங்கும் மானாமதுரை..Representative Image.

தமிழகத்தில் நிகழும் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் மக்களை பீதியடைய வைக்கிறது. சட்ட ஒழுங்கில் காவல்துறை தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். சைபர் க்ரைம் குற்றங்களும் அதிகரித்துள்ளதால் காவல்துறை திணறி வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. பட்டப்பகலில் பொது இடத்தில் கல்லூரி மாணவி கொலை, கார் குண்டு வெடிப்பு என தனிமனித குற்றம் முதல் தீவிரவாத தாக்குதல் வரை தமிழகத்தை உலுக்கி கொண்டிருக்கிறது. இந்த நிலையில், சிவகங்கை மாவட்டத்தில் இளைஞரை கொன்று தலையை தனியாக எடுத்து சென்ற கும்பலின் செயல் மாவட்டத்தையே பீதியில் ஆழ்த்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள செங்கோட்டை பகுதியை சேர்ந்தவர் 24 வயதான ராம். நேற்று மாலை இவரை அவரது நண்பர் ராமுவிற்கு போன் செய்து, கண்மாய் பகுதிக்கு வருமாறு அழைத்துள்ளார். உடனே ராமுவும் புறப்புட்டு அங்கே போவதாக வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார். வெகுநேரமாகியும் ராமு வீட்டிற்கு வரவில்லை என கூறப்படுகிறது. இதனால், பயந்துபோன இவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடி அலைந்துள்ளனர். இந்த நிலையில், இன்று அதிகாலை இம்மனேந்தல் கண்மாய் கரையில் அடையாளம் தெரியாத இளைஞர் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டு கிடப்பதாக ஊர் மக்களுக்கு தகவல் கிடைத்தது.

பதறிப்போன ராமுவின் உறவினர்கள் அங்கு சென்று பார்த்தபோது கொலை செய்யப்பட்டு கிடந்தவர் தேடப்பட்டு வந்த ராமு என்பது தெரியவந்தது. இது குறித்து தகவல் அறிந்து வந்த மானாமதுரை போலீசார் ராமுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு மருத்துவ கல்லுரிக்கு அனுப்பி வைத்தனர்.

இன்று காலை முதல் தீயணைப்பு துறையினர் கண்மாய் தண்ணீரில் இறங்கி தலையை தேடி வருகின்றனர். கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த நிலையில் சடலத்தில் தலை இல்லாமல் இருப்பதால் சிவகங்கை அரசு மருத்துவமனை மருத்துவ கல்லுரியில் பிரேத பரிசோதனைக்கு அனுமதிக்கப்படாததால், இரவில் இருந்து சடலம் அரசு மருத்துவமனையின் வெளியே ஆம்புலன்ஸில் வைக்கப்பட்டுள்ளது. இளைஞரின் தலையை வெட்டி எடுத்துச் சென்ற சம்பவம் மானாமதுரை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்