Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தாயின் கேவலமான செயல்.. மூடநம்பிக்கையின் உச்சம்..

Nandhinipriya Ganeshan Updated:
தாயின் கேவலமான செயல்.. மூடநம்பிக்கையின் உச்சம்.. Representative Image.

பரிகார பூஜை என்ற பெயரில் தினமும் பல்வேறு மோசடிகள், பாலியல் வன்முறைகள் என செய்திகள் வந்தாலும் மக்கள் ஏமாறும் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. அதேப்போல் ஒரு சம்பவம் சிவகங்கை அருகே நடந்துள்ளது. சிவகங்கை மாவட்டம், காரைக்குடியை சேர்ந்தவர் ரேணுகா தேவி, இவருக்கு அதேப்பகுதியை ஒருவருடன் திருமணமாகி 11 வயதில் மகனும்,8வயதில் மகளும் உள்ளனர். ரேணுகா தேவியின் கணவர் சென்னையில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் ரேணுகாதேவிக்கு திருப்பத்தூர் வேட்டங்குடிப்பட்டி பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்ற போலி சாமியாருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

தான் பரிகார பூஜைகள் செய்தவதில் கில்லாடி என்றும் பல குடும்பங்களுக்கு பரிகார பூஜை செய்து குடும்ப கஷ்டங்களை நீக்கி உள்ளதாக ஆசை வார்த்தைகளை அள்ளி வீசியுள்ளார். சாமியார் சொல்வது உண்மை என நம்பிய ரேணுகாதேவி தனக்கு பணம் பெருக வேண்டும் என்றும் அதற்கு சாமிகள் பரிகார பூஜைகள் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்நிலையில், தோஷம் கழிப்பதாக கூறி தனது சித்தர் பீடத்திற்கு அடிக்கடி வரவழைத்து,தனது சித்து விளையாட்டுகளை அரங்கேற்றியுள்ளார் போலி சித்தர். இப்படியே சென்றுகொண்டிருந்த நிலையில், பரிகார பூஜை செய்ய வேண்டும் என போலி சாமியார் கேட்டுள்ளார். அதற்கு இணங்க, கடந்த அக்.22ம் தேதி ரேணுகாதேவி தனது 11 வயது மகனையும், 8வயது மகளையும் போலி சாமியாரின் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.

அன்று தான் போலி சித்தர் தனது கொடூரத்தை அரங்கேற்றியுள்ளார். போலி சாமியார், ரேணுகா தேவி மற்றும் அவரது மகன், மகளை ஆகிய மூன்று பேரையும் நிர்வாணப்படுத்தியதாக சொல்லப்படுகிறது. பின்னர் சிறுவர், சிறுமி கண்முன்னே தாயிடம் தகாத உறவின் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.மேலும், சிறுவன், சிறுமியை உறவில் ஈடுபட வற்புறுத்தியதாகவும், சாமியாரும், ரேணுகாதேவியும் பார்த்து ரசித்ததாக கூறப்படுகிறது.

ஆனால் சிறுமியாக இருந்தாலும் சுதாரித்துக்கொண்ட ரேணுகாதேவியின் மகள் இதுகுறித்து தனது பாட்டியிடம் கூறியுள்ளார்.இதுகுறித்து பாட்டி, சென்னையில் உள்ள தனது மகனுக்கு தகவல் கொடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து வீட்டிற்கு வந்த கணவர், மனைவியின் செயலை கேட்டு கூனிக்குறுகி உள்ளார். பின்னர் உறவினர்களுடன் சென்று போலி சாமியார் குடியிருந்து வரும் நாச்சியாபுரம் காவல்நிலையத்தில் போலி சாமியார் மற்றும் தனது மனைவி மீது புகார் அளித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து இருவர் மீதும் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஊருக்கு ஒதுக்குப்புறமாக சித்தர் பீடம் அமைத்து போலி சாமியார் தனது சித்து விளையாட்டுகளை அரங்கேற்றி உள்ளது போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்