சென்னையில் எலெக்ட்ரிக் ரயில் மீது பாய்ந்து இளம் காதல் ஜோடி தற்கொலை செய்ய முயற்சித்ததில் காதலி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று இரவு சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி எலெக்ட்ரிக் ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. சுமார் 8.15 மணியளவில் ரயில் பரங்கிமலை ரயில்நிலையம் அருகே வந்தது. அப்போது இளம் காதல் ஜோடி ஒன்று, கட்டிப்பிடித்தபடியே ரயில் முன்பு திடீரென பாய்ந்தனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த ரயில் ஓட்டுநர் மாம்பழம் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் வந்து பார்க்கையில், இளம்பெண் ரயிலில் தலை துண்டிக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், அந்த பெண்ணின் காதலன் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டிருந்தார்.
இதையடுத்து ரயில்வே போலீசார் உடனடியாக காதலனை மீட்டு, சென்னை சிகிச்சைக்காக ராஜிவ்காந்தி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உயிரிழந்த இளம் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில், காதலன் மடிப்பாக்கம் பகுதியை சேர்ந்த 20 வயதான இளங்கோ என்பது தெரிய வந்துள்ளது. உயிரிழந்த பெண் யார் என்பது இன்னும் தெரியாத நிலையில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே விபத்து காரணமாக, இதர ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு தாமதமாக இயக்கப்பட்டன.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…