மாலத்தீவு செல்லும் கோ பர்ஸ்ட் விமானம் நடுவானில் ஸ்மோக் அலாரம் ஒலித்ததால் அவசரமாக கோவைக்கு திருப்பி விடப்பட்டு அங்கு தரையிறக்கப்பட்டது.
பெங்களூரில் இருந்து 92 பயணிகளுடன் கிளம்பிய இந்த விமானம், புகை அலாரம் ஒலித்ததால் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானம் விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டு ஏப்ரனில் நிறுத்தப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில் விமானத்தின் அனைத்து செயல்பாடுகளும் இயல்பாக இருப்பதாக விமானி அறிவித்தார்.
விமானத்தை சோதனை செய்த பொறியாளர்கள், இரட்டை என்ஜின்கள் அதிக வெப்பமடைந்ததால் இது நடந்திருக்கலாம் என்று தெரிவித்தனர். மேலும் அலாரத்தில் ஏதோ பிழை இருப்பதாக அறிவித்து, விமானம் பயணிக்கத் தகுதியானது என்று அறிவித்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
அதைத் தொடர்ந்து, அந்த விமானம் மாலத்தீவில் உள்ள தனது இலக்கை நோக்கிச் சென்றதாக விமான நிலைய வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
இந்த சம்பவம் குறித்து கோ ஃபர்ஸ்ட் செய்தித் தொடர்பாளர் ஒருவரிடம் கேட்டபோது, “இந்த விவகாரத்தை கோ ஃபர்ஸ்ட் இன்ஜினியரிங் குழு ஆய்வு செய்து, சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது” என்றார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…