நெல்லையில் மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் 2022 நிகழ்வு வரும் சனிக்கிழமை நடக்கவுள்ளது. அதுகுறித்து முழுவதும் தெரிந்து கொண்டு நிகழ்வில் கலந்துகொள்ளுங்கள். தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு உங்கள் தகுதிக்கேற்ற வேலையைப் பெற்று வாழ்க்கையைத் துவங்குங்கள்.
நாள் - ஆகஸ்ட் 6, 2022
நேரம் - காலை 9 மணி முதல்
நுழைவுக் கட்டணம் - முற்றிலும் இலவசம்
இடம் - பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி, வண்ணாரப்பேட்டை
திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் வரும் ஆகஸ்ட் 8 சனிக்கிழமை வண்ணாரப்பேட்டையில் நடைபெற உள்ளது. இந்த வேலை வாய்ப்பு முகாமில் 200க்கும் அதிகமான தனியார் துறை முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று உங்களின் தகுதியை எடை போட உள்ளனர். நல்ல வேலை எதிர்பார்த்து காத்திருக்கும் இளைஞர்கள் இந்த மாபெரும் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடைய வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
எட்டாம் வகுப்பு படித்தவர்கள் முதல் ஐடிஐ, டிப்ளமோ, நர்சிங், பட்டப்படிப்பு வரை படித்தவர்கள் என அனைத்து கல்வித்தகுதியினரும் கலந்து கொள்ளலாம்.
முகாமிற்கு வரும்பொழுது உங்களுடைய ரெஸ்யூம் அல்லது பயோடேட்டா, ஆதார் கார்டு நகல் மற்றும் கல்வி சான்றிதழ்களின் நகல்கள் கொண்டு வரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
மேலும் தமிழக அரசின் தனியார்துறை வேலைவாய்ப்பு இணையதளத்தில் ( www. tnprivatejobs. tn. gov. in ) தங்களது சுயவிவரங்களை பதிவு செய்து கொள்வது அவசியம்.
வேலை வாய்ப்பு முகாமிற்கு வரும் அனைவரும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி வரவேண்டும்.
மேலும் தகவல்களுக்கு, .
உதவி இயக்குநர்,
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்,
திருநெல்வேலி.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…