Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

திருமண ஆசை வார்த்தை கூறி மாணவியிடம் உல்லாசம்.. வசமாக சிக்கிய பாதிரியார்!!

Sekar July 28, 2022 & 16:25 [IST]
திருமண ஆசை வார்த்தை கூறி மாணவியிடம் உல்லாசம்.. வசமாக சிக்கிய பாதிரியார்!!Representative Image.

திருநெல்வேலியில் மாணவியை காதலித்து ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய சிஎஸ்ஐ பாதிரியார் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி போலீஸ் ஆயுதப்படை மைதானம் பகுதியை சேர்ந்த இன்பராஜ் என்பவற்றின் மகன் மில்டன் கனகராஜ் (26 வயது). இவர் இறையியல் படிப்பு முடித்து கே.டி.சி. நகர் பகுதியில் உள்ள சிஎஸ்ஐ ஆலயத்தில் பயிற்சி பாதிரியாராக இருந்து வருகிறார்.

இவர் தனது வீட்டிற்கு அருகில் வசித்து வரும் ஒரு மாணவியுடன் கடந்த ஒன்றரை ஆண்டாக நெருங்கி பழகி வந்துள்ளார். மேலும் திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். 

இதற்கிடையே பயிற்சி பாதிரியாரின் பெற்றோர் அவருக்கு கல்யாணம் செய்து வைக்க பெண் பார்க்கும் படலத்தை தொடங்கியுள்ளனர். இது அரசல் புரசலாக அந்த மாணவியின் காதுக்கு எட்ட, அவர் மில்டன் கனகராஜிடம் நியாயம் கேட்டுள்ளார்.

ஆனால் நியாயம் கேட்ட மாணவியை மில்டன் மிரட்டியதோடு, வெளியே சொன்னால் எரித்து கொன்றுவிடுவேன் என கொலை மிரட்டலும் விடுத்து உள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி போலீசில் புகார் அளிக்க, துரித நடவடிக்கை எடுத்த போலீசார் மில்டனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்