சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டுக்கு சென்ற மின்சார ரெயில் கடைசி நிறுத்தமான செங்கல்பட்டில் நின்றபோது பெண்கள் மட்டும் பயணம் செய்யும் ரெயில் பெட்டியில் ஒரு கட்டைப்பையில் இருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டது.
இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் கட்டைப்பையை திறந்து பார்த்தபோது பிறந்து வெறும் 10 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை அதில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அங்கிருந்த ரெயில்வே போலீசாருக்கு உடனே தகவல் கொடுத்து வரவழைக்கப்பட்டனர்.
இதையடுத்து அங்கு வந்த ரயில்வே போலீசார் குழந்தையை மீட்டு விசாரணை நடத்தினர். எனினும் குழந்தையின் தாய் யார் என்று தெரியவில்லை. இதையடுத்து குழந்தையை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் நல பிரிவில் அனுமதித்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குழந்தை வேண்டுமென்றே தாயால் விட்டுச் செல்லப்பட்டதா அல்லது யாரேனும் கடத்தி வந்தபோது அங்கு விட்டுச் சென்றனரா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…