Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நாமக்கல் மாவட்ட மக்களுக்கு.. கலெக்டர் ஷ்ரேயா சிங் முக்கிய அறிவிப்பு!!

Sekar August 17, 2022 & 12:22 [IST]
நாமக்கல் மாவட்ட மக்களுக்கு.. கலெக்டர் ஷ்ரேயா சிங் முக்கிய அறிவிப்பு!!Representative Image.

நாமக்கல் மாவட்டத்தில் எம்எஸ்எம்இ எனப்படும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களைத் தொடங்க மத்திய மற்றும் மாநில அரசுகள் மானியத்துடன் கூடிய கடன் திட்டங்களை வழங்கி வரும் நிலையில், அவற்றை பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஷ்ரேயா சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது பின்வருமாறு :- எம்எஸ்எம்இ தொழில்களின் மேம்பாட்டிற்காகவும், வளா்ச்சிக்காகவும் தமிழக அரசு மானியத்துடன் கூடிய மூன்று கடன் திட்டங்களை மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தி வருகிறது.

புதிதாக தொழில் செய்ய விரும்பும் தொழில் முனைவோர்களுக்கு தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தில் உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழில்களுக்கு குறைந்தபட்சமாக ரூ.10 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ. 5 கோடி வரை தேசியமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் ஆகியவற்றின் மூலம் 25 சதவீத மானியத்துடன் (அதிகபட்சமாக ரூ.75 லட்சம்) நிதியுதவி வழங்கப்படுகிறது.

பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்த தொழில் முனைவோருக்கு 10 சதவீதம் கூடுதல் முதலீட்டு மானியம் வழங்கப்படும். மேலும் 3 சதவீதம் பின்முனை வட்டி மானியமும் இவர்களுக்கு வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் கடன் பெற விரும்பும் பொது பிரிவினர் 21 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

சிறப்பு பிரிவினர் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும் 12 ஆம் வகுப்பு அல்லது அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனங்கள் மூலம் பெறப்பட்ட தொழிற் பயிற்சி சான்றிதழ் பெற்றவராக இருத்தல் வேண்டும்.

வேலைவாய்ப்பில்லாத இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் மூலம் 25 சதவீத மானியத்துடன் (அதிகபட்சமாக ரூ.1.25 லட்சம்) கடனுதவி வழங்கப்படும்.

பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் உற்பத்தி சார்ந்த தொழில்களுக்கு அதிகபட்சமாக ரூ. 50 லட்சமும், சேவை மற்றும் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு அதிகபட்சமாக ரூ.20 லட்சம் வரையிலும் வங்கிக் கடன் வழங்கப்படுகிறது. 

மேலும் நகா்ப்புறங்களில் தொடங்கப்படும் தொழில்களுக்கு திட்ட மதிப்பீட்டில் பொது பிரிவினருக்கு 15 சதவீத மானியமும், கிராமப்புறங்களில் தொடங்கப்படும் தொழில்களுக்கு திட்ட மதிப்பீட்டில் 25 சதவீத மானியமும், சிறப்பு பிரிவினருக்கு நகா்ப்புறங்களில் தொடங்கப்படும் தொழில்களுக்கு திட்ட மதிப்பீட்டில் 25 சதவீத மானியமும், கிராமப்புறங்களில் தொடங்கப்படும் தொழில்களுக்கு திட்ட மதிப்பீட்டில் 35 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் கடன் பெற விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரா்கள் 18 வயதுக்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும். திட்ட மதிப்பீடு உற்பத்தி பிரிவில் ரூ. 10 லட்சத்திற்கு அதிகமாகவும், சேவைப் பிரிவில் ரூ. 5 லட்சத்திற்கு அதிகமாகவும் இருக்கும்பட்சத்தில் விண்ணப்பதாரர் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தகுதி வாய்ந்த விண்ணப்பத்தாரா்கள் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும் விபரங்களுக்கு, நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட தொழில் மைய பொது மேலாளரை நேரிலோ அல்லது 04286 281251 என்ற தொலைபேசி எண்ணிலோ அலுவலக வேலை நேரங்களில் தொடா்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்