Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

விளையாட்டில் விபரீதம்.. 3 குழந்தைகள் மூச்சுத் திணறி பலி!!

Sekar June 05, 2022 & 10:48 [IST]
விளையாட்டில் விபரீதம்.. 3 குழந்தைகள் மூச்சுத் திணறி பலி!!Representative Image.

திருநெல்வேலி மாவட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 3 குழந்தைகள் காருக்குள் சிக்கி மூச்சுத் திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகேயுள்ள லெப்பைகுடியிருப்பு பகுதியைச் சேர்ந்த நாகராஜ் மற்றும் அருணா தம்பதியின் குழந்தைகள் நித்திஷ் (7), நிதிஷா (5) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த சுதன்- தபிஷா தம்பதியின் குழந்தையான கபிசாந்துடன் (4) சேர்ந்து விளையாடியுள்ளனர்.

அப்போது நாகராஜின் வீட்டின் அருகில் நிறுத்தப்பட்டிருந்த அவரது அண்ணனின் காருக்குள் ஏறி 3 குழந்தைகளும் விளையாடியுள்ளதாகத் தெரிகிறது. நீண்ட நேரம் காரில் விளையாடிய குழந்தைகள் காரின் கதவைத் திறக்க முயற்சி செய்தபோது திறக்க முடியவில்லை.

இந்நிலையில் காருக்குள் சிக்கிய 3 குழந்தைகளும் காரிலேயே மூச்சுத் திணறி மயங்கி விழுந்துள்ளனர். இதற்கிடையே நீண்ட நேரமாக குழந்தைகளைக் காணாததால் பதறிய பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களிலும் தேடியுள்ளனர். 

அப்போது காருக்குள் 3 குழந்தைகளும் மயங்கிக் கிடப்பது தெரியவந்ததை அடுத்து, அவர்கள் மீட்கப்பட்டு உடனடியாக பணகுடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால் 3 குழந்தைகளும் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

இந்நிலையில் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்