Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பெண்ணிடம் கைவரிசை காட்டிய திருடன் - சுற்றிவளைத்து தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்!

Baskaran Updated:
பெண்ணிடம் கைவரிசை காட்டிய திருடன் - சுற்றிவளைத்து தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்!Representative Image.

திருப்பூர்: பெண்ணிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட நபரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். 

திருப்பூர் பி.என் ரோடு கணக்கம்பாளையம் பிரிவு அருகில் பள்ளிக்குச் சென்ற மகனை அழைப்பதற்காக சாலையில் நின்று இருந்த பெண்ணின் மொபைலை பறித்து சென்ற நபரை பொதுமக்கள் துரத்திப் பிடித்து  கடுமையாக தாக்கி  காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். முதலில் பெருமாநல்லூர் காவல்துறையினர் வந்து விசாரணை மேற்கொண்டதில் திருமுருகன் பூண்டி காவல் நிலையத்துக்கு உட்பட்ட எல்லை என்று தெரிவித்ததை அடுத்து  திருமுருகன்பூண்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இதை அடுத்து பூண்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்த பிறகு இது எங்கள் எல்லைக்குட்பட்ட பகுதி இல்லை என்றும், இது 15வேலம்பாளையம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதி என்று தெரிவித்து 15வேலம்பாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். காவல் நிலைய எல்லையில் குழப்பம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து செல்போன் பறிப்பில் ஈடுபட்ட நபரை 15 வேலம்பாளையம் காவல்துறையினர் கைது செய்தனர்.

அவர் போதையில் இருந்ததால் அவரிடம் விசாரணை மேற்கொள்ள முடியவில்லை. மேலும் அந்த போதை ஆசாமியிடமிருந்து இரண்டு செல்போன் மற்றும் 150 கிராம் கஞ்சா பொட்டலங்கள் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்