திருப்பூர் காதர்பேட்டை பனியன் சந்தையில் நேற்றிரவு தீ விபத்து நடந்த நிலையில், செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இன்று சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருப்பூர் காதர் பேட்டை எனும் பனியன் சந்தையில் நேற்றிரவு ஏற்பட்ட தீவிபத்தில் 50க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்தன. இதில் பல கோடி ரூபாய் மதிப்பில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பனியன் துணிகள் மற்றும் பொருட்கள் சாம்பலாயின.
இந்நிலையில், விபத்து நிகழ்ந்த இடத்தை செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 50 கடைகள், மூன்று வீடுகள், 4 இருசக்கர வாகனங்கள் சேதமடைந்திருக்கிறது. தோராயமாக அதன் மதிப்பு மூன்று கோடி ரூபாய் என தெரியவந்துள்ளது. வணிகர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் நாளைய தினமே மீண்டும் இவ்விடத்தில் கடைகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது, என்றார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…