திருப்பூர் மாவட்டத்தில் பாஜகவினரின் மீது நடத்தி வரும் தொடர் தாக்குதல், நெருக்கடி அளித்து வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் ஆட்சியர் அலுவலகத்தில் பாஜகவினர் மனு அளித்தனர்.
இதுதொடர்பாக, மாவட்ட தலைவர் செந்தில்வேல் தலைமையில் கட்சியினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் , ஆட்சியர் அலுவலகத்திலும் புகார் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறியுள்ளதாவது:
திருப்பூர் மாவட்டம் அவிநாசிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொங்களூர் பகுதியில் நீண்ட நாட்களாக பயன்பாட்டில் இருந்த கழிவுநீர் கால்வாயை ஜேசிபி வாகனம் மூலம் அடைக்க முயன்ற திமுகவினரை தட்டிக் கேட்டதற்காக பாஜக நிர்வாகி செல்வகுமார் என்பவரை கொலை செய்ய திமுகவினர் முயற்சித்தனர்.
இதுகுறித்து அவிநாசி பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. அதே போல் தெற்கு தாலுகா இடுவாய் கிராமம் பாரதிபுரத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினரால் பாஜக நிர்வாகிகள் செல்வக்குமார் , செகமலையப்பன் மற்றும் சம்பத்குமார் ஆகியோர் தாக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து திருப்பூர் மாவட்டத்தில் பாஜகவினர் மீதான நெருக்கடியும், தாக்குதலும் அதிகரித்து வருகிறது. சுமூக வாழ்க்கை வாழ முடியாத சூழ்நிலை உருவாகியுள்ள அச்சத்தை நீக்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…