Erode flash news : ஈரோட்டில் டாக்டர் வீட்டில் கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
ஈரோடு -பெருந்துறை ரோடு டாக்டர் தங்கவேல் வீதியை சேர்ந்த விஷ்ணுதீபக் என்ற டாக்டர் மற்றூம் அவரது மனைவி சத்யா ஆகிய இவர்களுக்கு யோக சந்திரான் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் விஷ்ணு தீபக் தனது மகனுக்கு மொட்டை போடுவதற்காக கடந்த 22-ம் தேதி குடும்பத்துடன் விருதாசலத்துக்கு சென்றுள்ளார்.
திருட்டு
இதனையடுத்து, நேற்று அதிகாலை விஷ்ணு தீபக் தனது குடும்பத்தினருடன் வீடு திரும்பினார். இந்நிலையில், வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தார்.
அப்போது, வீட்டில் இருந்த 45 பவுன் நகை, ரூ.3 லட்சம் உட்பட ½ கிலோ வெள்ளி பொருட்கள் காணாமல் போனது தெரிய வந்தது. மேலும் வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் சிதறிய நிலையில் இருந்தன.
நூதன முறை
மேலும் போலீசாரின் கவனத்தை திசை திருப்பும் வகையில் வீடு முழுவதும் மிளகாய் பொடி தூவி சென்றுள்ளனர்.
வழக்குப்பதிவு
இது குறித்து, ஈரோடு மாவட்ட காவல் நிலையத்தில் விஷ்ணு தீபக் புகாரளித்தார். இந்நிலையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணை
இதுகுறித்து ஈரோடு மாவட்ட காவலர்கள் வழக்குப்பதிவு செய்து, கொள்ளை நடந்த வீடு மற்றும் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்து வருகிறார்கள்.
ஈரோடு மாவட்டம் முழுவதும் கடந்த சில தினங்களாக கொள்ளை சம்பவம் தொடர்ந்து வருகிறது. இதனால் ஈரோடை சேர்ந்த பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…