தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. அதன்படி, கோவை, திருப்பூர், தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது.
இந்நிலையில், கோவையில் பெய்த கனமழையால் பல பகுதிகளில் சாலைகளில் பள்ளம் ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இந்நிலையில், சாலையில் தேங்கிய நீர் வெளியேறும் கழிவுநீர் கால்வாய் அருகே குப்பைகள் சேர்ந்து நீர் வெளியேற முடியாத நிலையில் உள்ளது.
இதனையடுத்ர்து, கழிவுநீர் கால்வாயில் குப்பை அடைத்துள்ளதை கண்ட காவலர் ஒருவர் அந்த குப்பைகளை அகற்றி நீர் செல்ல வழி ஏற்படுத்தினார்.
மேலும், இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதற்க்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…