திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையத்தில் உள்ள கனரா வங்கியின் கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் அளிக்கும் பொன்னான வாய்ப்பு ஆகும். இந்த பகுதி வசிக்கும் வறுமை கோட்டிற்கு கீழ்வாழ் மக்களுக்கு இலவச போட்டோகிராபி பயிற்சி வழங்கப்பட உள்ளது.
போட்டோகிராபியில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு கனரா வங்கியின் கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில் 30 நாட்களுக்கு "இலவச போட்டோ கிராஃபி மற்றும் விடியோ கிராஃபி பயிற்சி வகுப்பு" அளிக்கப்படும். இந்த பயிற்சி சேர நேர்காணல் 29.09.2022 மற்றும் 30.09.2022 நடைபெறும். 18 முதல் 45 வயதிற்கு உட்பட்ட ஆண்/ பெண் இருபாலரும் எழுத படிக்கத் தெரிந்தால் போதும் இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.
இலவசமாக அளிக்கப்படும் இந்த பயிற்சிக்கு SKILL INDIA சான்றிதழ் அளிக்கப்படும். அத்துடன் தொழில் தொடங்க கடன் ஆலோசனையும் வழங்கப்படும். மேலும் பயிற்சி வரும் இளைஞர்களுக்கு காலை, மாலை தேநீர், மதிய உணவு இலவசமாக ஏற்பாடு செய்யப்படும்.
எப்படி விண்ணப்பது?
கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம்,
மாவட்ட தொழில் மையம் (எதிரில்) ,
அவினாசி சாலை,
அனுப்பர்பாளையம் புதூர்,
திருப்பூர்- 641 652.
தொடர்புக்கு:- 0421 2256626, 99525 18441, 86105 33436
மின்னஞ்சல்:- https: //tinyurl. com/y7t7cfqo
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…