விவசாயம் தான் நாட்டின் முதுகெலும்பு என்பது ஆதாரம் விவசாயம் செழித்தால் மக்கள் வாழ்வு செழிக்கும் என்பதாகும். நம் இந்திய திருநாட்டின் முக்கிய தொழிலான விவசாயம் இன்று பல்வேறு புதிய யுக்திகளையும் புதிய நுட்பங்களையும் கொண்டு நடக்கிறது. இருப்பினும் நம் இந்திய விவசாயிகளின் வருமானம் என்பது அப்படியே நின்றுவிட்டது. உலகம் போகும் வேகத்திற்கு விவசாயிகளின் வருமானம் உயர வேண்டும் அல்லவா! அதற்கான யோசனையை திருப்பூர் மாவட்ட வேளாண் துணை இயக்குநர் கொடுத்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 2 ஆம் நாள் உலக தென்னை தினமாக கொண்டாடப்படுகிறது. திருப்பூரில் குடிமங்கலம் என்னும் ஊரில் உலக தென்னை தினத்தன்று நடந்த கருத்தரங்கம் ஒன்றில் 22 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவு கொண்ட குடிமங்கல விவசாய நிலத்தின் மூலம் வருமானத்தை உயர்த்த ஒரு அறிவுரை கொடுத்தார்.
குடிமங்கலத்தில் இருக்கும் 22 ஆயிரம் ஹெக்டரில் 13 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் தென்னை பயிரிடப்பட்டுள்ளது. இந்த சுற்று வட்டார பகுதி மக்களுக்கு வாழ்வதாரமாக உள்ள தென்னையை நிரந்தர பயிராக பயிரிட வேண்டும் என்றார் உதவி இயக்குநர் வசந்தா.
மேலும் தென்னையுடன் மிளகு, மகோகனி போன்றவை ஊடுபயிராக பயிரிடலாம். இதன் மூலம் வருமானம் உயரும் என்பதை திருப்பூர் மாவட்ட வேளாண் துணை இயக்குநர் சுருளியப்பன் உரைத்தார்.
தென்னையில் ஏற்படும் நோய்களைத் தடுக்க தேனீ வளர்ப்பு செய்வதும் வருமானத்தையும் உயர்த்தும் எனப் பல கருத்துகள் பரிமாறிப்பட்டது. இந்த ஆலோசனைகளைப் பின்பற்றுவது மூலம் விவசாயிகள் நிச்சியம் பலன் பெற முடியும்.
இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் Search Around Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…
Tag: Tirupur Velan Seithigal | Latest News In Tirupur | Latest News Tamil Tirupur District | திருப்பூர் செய்திகள் இன்று | திருப்பூர் மாவட்ட செய்திகள் இன்று | Tirupur Flash News Live
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…