கோவை கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோவில் முன்பு நடந்த கார் வெடிப்பு சம்பவம் ஐஎஸ்ஐஎஸ், அல்கொய்தாக்கள் பயன்படுத்தும் ஒற்றை ஓநாய் தாக்குதல் (Lone wolf attack) முறையை ஒத்திருப்பது போலீஸ் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
தீபாவளிக்கு முந்தைய தினம் கோவை உக்கடம் பகுதியில் உள்ள கோட்டை சங்கமேஸ்வர் கோவில் எதிரில் கார் சிலிண்டர் வெடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், இந்த சம்பவத்தில் தீவிரவாத தொடர்புகள் கண்டறியப்பட்டதோடு, உயிரிழந்தவர் பழைய துணிக்கடை வியாபாரியான ஜமோசா முபின் என தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் மிகத் தீவிரமாக விசாரணை நடத்திய நிலையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதல், தீவிரவாத சிந்தனை கொண்டவர்கள் கையாளும் ஒற்றை ஓநாய் தாக்குதல் முறையை (Lone wolf attack) ஒத்திருப்பது தெரியவந்துள்ளது.
ஒற்றை ஓநாய் தாக்குதல் என்பது, தீவிரவாத அமைப்பின் உதவியின்றி தங்கள் சித்தாந்தத்திற்காக தனி நபர்கள் தனியாக தாக்குதல் நடத்தும் முறை ஆகும். இந்த ஒற்றை ஓநாய் தாக்குதல்களை ஐஎஸ்ஐஎஸ் மற்றும் அல் கொய்தா போன்றவை உருவாக்கியவை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தற்போது என்ஐஏ வசம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்ட நிலையில், என்ஐஏ எப்ஐஆர் பதிவு செய்து கோவை மட்டுமல்லாது தமிழகத்தின் பிற பகுதிகளிலும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…