நாளை திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் நெல்லையப்பப்பர் காந்திமதி அம்பாள் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் நடக்கும் ஆனிப் பெருந்திருவிழா வெகு பிரசித்தம். இந்த திருவிழாவிக்ரு தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்களிலும் இருந்து பக்தர்கள் வருவர்.
கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக பத்தர்கள் இன்றி திருவிழா நடத்தப்பட்டு வந்த நிலையில், இந்த முறை பக்தர்கள் பங்கேற்புடன் நடக்க உள்ளது.
இந்த விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நாளை நடைபெறவுள்ள நிலையில் நாளை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் ஆகியவற்றுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயத்தில் இந்த நாளில் ஏதேனும் அரசு பொதுத்தேர்வுகள் இருந்தால் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் வழக்கம் போல செயல்படும். இதற்கிடையில் இந்த விடுமுறை நாளை ஈடுசெய்யும் வகையில் வரும் ஜூலை 23ஆம் தேதியன்று பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் வேலை நாளாக இயங்கும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…