Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Woman Doctor Suicide: திருமணமான 6 மாதத்தில் பெண் டாக்டர் தற்கொலை... அதுவும் காதல் திருமணமாம்...!!

Nandhinipriya Ganeshan May 21, 2022 & 15:05 [IST]
Woman Doctor Suicide: திருமணமான 6 மாதத்தில் பெண் டாக்டர் தற்கொலை... அதுவும் காதல் திருமணமாம்...!!Representative Image.

Woman Doctor Suicide: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் கூட்டுறவு காலனியை சேர்ந்தவர் அபிஷேக். இவருக்கு வயது 30, கோபிசெட்டிபாளையத்தில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி ராசி. இவருக்கு 27 வயதாகிறது. இவர்களுக்கு திருமணமாகி ஆறு மாதங்கள் ஆகிறது. ராசியின் தாயார் மேட்டுப்பாளையம் கெண்டையூரில் தனியார் மருத்துவமனை வைத்து நடத்தி வருகிறார். 

இதற்கிடையே ராசி கடந்த 2020 ஆம் ஆண்டு எம்.பி.பிஎஸ் படித்து முடித்துள்ளார். அவர் முதுகலை  (எம்.எஸ்., எம்.டி) பட்டம் பெற நீட் தேர்வு எழுதுவதற்காக மேட்டுப்பாளையம் காட்டூர் காமராஜ் நகரில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் இருந்து படித்து வந்துள்ளார். இதற்கிடையில், நீட் தேர்வு எழுவது தொடர்பாக ராசிக்கு மனதில் பயம் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று காலை ராசி வீட்டின் 3 - வது மாடியில் படிக்க சென்றுள்ளார். ஆனால், ரொம்ப நேரம் ஆகியும் அவர் மதியம் சாப்பிட கூட வரவில்லை. இதனால், சந்தேகத்தில் அவரது தாயார் மதியம் 3 மணிக்கு மாடிக்கு சென்று பார்த்துள்ளார்.

ராசி தற்கொலை:

அப்போது அறைக்கதவு உட்புறமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. கதவை தட்டியும் திறக்க வில்லை. இதனால் அவர் ஜன்னல் வழியாக பார்த்தார். அங்கு ராசி மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்கு போட்டு தொங்கிக் கொண்டிருப்பது தெரியவந்தது.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் தாயார் கதறி அழுததில் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். இது குறித்த தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராசியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து ராசியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

ஆர்.டி.ஓ. விசாரணை:

திருமணமான 6 மாதத்தில் பெண் டாக்டர் தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தியது. இதுவரை தற்கொலை குறித்து 13 பேரிடம் ஆர்.டி.ஓ. விசாரணை மேற்கொள்ளப்பட்டது.  விசாரணைக்கு பின்னர் ராசியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதன் அறிக்கை மற்றும் கோவை வடக்கு ஆர்.டி.ஓ.வின் அறிக்கை வந்த பின்னர் தான் பெண் டாக்டர் தற்கொலை செய்துகொண்டதற்கான உண்மையான காரணம் தெரியவரும். நீட் தேர்வு அச்சம் காரணமாக பெண் டாக்டர் தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்