தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வந்தவர் ஸ்ரேயா சரண். இவர் ரஜினி, தனுஷ், விஜய், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக தனது எதார்த்தமான நடிப்பில் பல லட்சக்கணக்கான ரசிகர்களின் இதயத்தை கொள்ளையடித்தவர். கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவை சேர்ந்த டென்னிச் வீரர் ஆன்றோ கோஸ்சீவ் என்பவரை திருமணம் செய்துக் கொண்ட ஸ்ரேயாவுக்கு ஒரு குழந்தையும் உள்ளது.
சுமார் 3 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோவர்களை இன்ஸ்டாகிராமில் வைத்துள்ள ஸ்ரேயா அவ்வப்போது தனது குடும்பத்துடனான போட்டோவை பதிவிடுவது வழக்கம். இந்த நிலையில், சமீபத்தில் மஞ்சள் சேலையில் எடுக்கப்பட்ட போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். சேலையில் கூட இப்படி கிளாமர் காட்டலாமா என்று ஆச்சர்யப்படும் அளவுக்கு இருக்கும் இந்த போட்டோஸ் பதிவு செய்த கொஞ்ச நேரத்திலேயே பல லட்சக்கணக்கான லைக்ஸ்களை வாங்கி குவித்துவருவதோடு, இணையத்திலும் வைரலாகி வருகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…