விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் அடுத்தடுத்து பரபரப்பான பல நிகழ்வுகளைக் கடந்து சென்றுகொண்டிருக்கிறது. இந்நிலையில் கையைப் பிடித்து மாட்டிக்கொள்கிறார் கோபி. அடுத்தடுத்து டுவிஸ்ட் மேல் டுவிஸ்ட் நடக்கிறது. இந்த வாரம் நேயர்களுக்கு நல்ல அனுபவம் காத்திருக்கிறது.
விஜய் டிவியின் டாப் தொடர்களில் முக்கியமானது பாக்கியலட்சுமி. சுவாரஸ்யத்தை மேலும் கூட்ட அவ்வப்போது இரண்டு சீரியல்களை ஒன்று சேர்த்து, அங்குள்ள கதாபாத்திரங்கள் இந்த சீரியலிலும், இங்குள்ள கதாபாத்திரங்கள் அந்த சீரியலிலும் வரும்படி கதையை சற்று மாற்றியமைப்பது வழக்கம். அதன்படி இப்போதும் இந்த மகா சங்கமம் நடைபெற்று வருகிறது.
பாக்கியலட்சுமி சீரியலில் வரும் கதாபாத்திரங்கள் பாண்டியன் ஸ்டோர் கதாபாத்திரங்களுடன் ஒளிபரப்பாகிறது. இதில், கோபியின் அப்பா பிறந்தநாள் பார்ட்டிக்கு ராதிகா வருகிறார். அவர் உள்ளே வந்தால் கோபி மாட்டிக் கொள்வாரே உடனே தனக்கு அவசரமாக ஒரு மீட்டிங் இருக்கிறது என உடனே ஒரு அறையில் சென்று ஒளிந்துகொள்கிறார். ஒவ்வொருவராக அழைத்தும் அவர் திரும்பி வரவில்லை. பிறந்தநாள் விழா முடிந்ததும், ராதிகா திரும்பி சென்று விடுகிறார்.
இதை மாடியிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த கோபி பின் கீழே இறங்கி வருகிறார். அந்த நேரத்தில் பால் பாக்கெட் வாங்க செல்கிறார் அவரது மகன் எழில். அதை தடுத்து நிறுத்தி நீ போக வேண்டாம் நானே போய் வாங்கி வருகிறேன் எனக் கூறிக்கொண்டு செல்கிறார் கோபி.
ராதிகாவுக்கு போன் செய்து வர வைக்கிறார் கோபி. அவருடனான சந்திப்பின் போது ராதிகா கையைப் பிடித்து கொஞ்சிக் கொஞ்சி பேசுகிறார். இதனை பாண்டியன் ஸ்டோர்ஸ் மூர்த்தி பார்த்து விடுகிறார். அவர் என்ன செய்யப் போகிறார். அடுத்தடுத்து என்ன என்ன டுவிஸ்ட் நடக்கப்போகிறது என்பது சுவாரஸ்யமாக உள்ளது. பொறுத்திருந்து பார்க்கலாம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…