Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

திருமணமான ஒரே மாதத்தில் விவாகரத்தில் முடிந்த விஜய் டிவி பிரபலங்களின் பல வருட காதல்.. காரணம் இதுதான்..!!

Nandhinipriya Ganeshan Updated:
திருமணமான ஒரே மாதத்தில் விவாகரத்தில் முடிந்த விஜய் டிவி பிரபலங்களின் பல வருட காதல்.. காரணம் இதுதான்..!!Representative Image.

பொதுவாக விஜய் டிவியில் இணைந்து நடிக்கும் ஜோடிகள் காதலித்து திருமணம் செய்துக் கொள்வது வழக்கமான ஒன்று தான். ஆனால், ஒரு சில ஜோடிகளின் காதலை ரசிகர்களால் எதிர்பார்க்க கூட முடியாத அளவிற்கு இருக்கும். அப்படி நடந்த காதல் திருமணம் தான் நடிகர் விஷ்ணுகாந்த் மற்றும் சம்யுக்தாவின் திருமணம். 

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'சிப்பிக்குள் முத்து' சீரியலில் ஒன்றாக இணைந்து நடித்த போது, உருகி உருகி காதலித்த சம்யுக்தாவும் விஷ்ணுகாந்தும் கடந்த மார்ச் 3 ஆம் தேதி பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். தற்போது, திருமணமான ஒரே மாதத்தில் இந்த இளம் ஜோடி குடும்ப பிரச்சனை காரணமாக பிரிந்துள்ளது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சமீபத்தில் தங்களுடைய பிரிவு குறித்து, சீரியல் நடிகரான விஷ்ணுகாந்த் பிரபல ஊடகம் ஒன்றில் பேட்டி ஒன்றை அளித்தார். அதில், பிரைவசியான டைம் மற்றும் பாண்டிங் ஆகுற டைம்ல அவங்க அப்பா வந்து டிஸ்டர்ப் பண்ணுறாரு என்பது போல் பேசி இருந்தார். விஷ்ணுகாந்த் பேசிய பல விஷயங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் சம்யுக்தா. இது குறித்த வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் படு வைரலாகி வருகின்றன.

அந்த வீடியோவில், "தனக்கும் விஷ்ணு காந்துக்கும் மார்ச் மூன்றாம் தேதி திருமணமானதாகவும், மார்ச் எட்டாம் தேதி சென்னைக்கு வந்ததாக கூறி உள்ள சம்யுக்தா. அதுவரை ஈரோட்டில் உள்ள விஷ்ணுகாந்தின் வீட்டில் தான் இருந்தோம் என தெரிவித்துள்ளார். மேலும் ஏப்ரல் மூன்றாம் தேதி வீட்டை விட்டு வெளியேறி விட்டேன். சரியாக ஒரு மாதம் மட்டுமே அவருடன் இருந்ததாக தெரிவித்துள்ளார். 

இருவரும் ஒன்றாக சென்னையில் இருந்த போது, அவருக்கு இரண்டு நாட்கள் மட்டுமே ஷூட்டிங் இருந்தது. எனக்கு மூன்று நாட்கள் ஷூட்டிங் இருந்தது. இதைத் தவிர மற்ற நாட்கள் இருவருமே வீட்டில் தான் இருந்தோம். வேலை என்று எதுவும் இல்லை. ஆனால் விஷ்ணுகாந்த் 15 நாட்கள் ஷூட்டிங் இருந்தது என்று சொல்வதெல்லாம் சுத்த பொய் என்று தெரிவித்துள்ளார்".

மேலும், தற்போது பிரச்சனை எனக்கும் விஷ்ணுகாந்துக்கும்  மட்டுமே நடக்கிறது. ஆனால் விஷ்ணுகாந்த் என்னுடைய அப்பா பற்றி பேசி இருக்க கூடாது. என்னுடன் பிரச்சனை என்றால் என்னை பற்றி மட்டும் பேசுங்கள் என கூறிய சம்யுக்தா, அவர் கேட்ட பிரைவசி ஆகுறதுக்கும், பாண்டிங் ஆகுறதுக்கும் 24 மணி நேரம் வேணும். நான் அவரை விட 10 வயது சின்ன பொண்ணு அதை கூட நினைத்து மாட்டாரு. நான் அவருக்கு ஒத்துழைக்கணும். நான் அதையும் பண்ணுனேன். அவர் எது சொன்னாலும் சரி சரி என்று தலையை ஆட்டிக்கொண்டு செய்தேன் என கூறியுள்ளார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்