பெங்காலில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சுசந்திர தாஸ்குப்தா. இந்த நிலையில் நேற்றைய தினம், சுசத்ரா மேற்கு வங்க மாநிலம் பாரா நகரில் படப்பிடிப்பு முடிந்து பைக் டாக்சியில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.
அப்போது அவர்களின் பைக்கிற்கு முன்னால் திடீரென சைக்கிளில் வந்த நபர் குறுக்கிட்டுள்ளார். இதனால், நிலைதடுமாறி பைக் ஓட்டுநர் மற்றும் நடிகை இருவரும் கீழே விழுந்துள்ளன. அப்போது அவ்வழியாக சென்ற லாரி அவர் மீது மோதியுள்ளது.
இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து அவர்களை மீட்டு பராநகர் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். பின்னர், மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். பின்னர், நடிகை மீது மோதிய லாரியின் டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
29 வயதான இளம் நடிகை சாலை விபத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…