Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை என்றிருந்த பிக்பாஸ் வீடு மீண்டும் போர்க்களம் ஆனது..!

Editorial Desk Updated:
எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை என்றிருந்த பிக்பாஸ் வீடு மீண்டும் போர்க்களம் ஆனது..!Representative Image.

பிக்பாஸ் சீசன் 6-ல் இந்த வாரம் முழுவதும் மிகவும் மகிழ்ச்சியாக அமைந்தது. அதற்குக் காரணம் போட்டியாளர்களின் குடும்பங்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்து அனைவரையும் இன்பத்தில் ஆழ்த்தினார்கள். அதை மாற்றும் வகையில் இன்று பிக்பாஸ், போட்டியாளர்களுக்கு ஒரு அதிரடி டாஸ்கை வழங்கியுள்ளார் என்பது நன்றாகத் தெரிகிறது.

இந்த வாரம் முழுவதும் அன்பும், பாசமும், மகிழ்ச்சியுமாக ஆனந்தத்தில் திளைத்த போட்டியாளர்களைப் பழைய நிலைமைக்கு மாற்றும் வகையில் பிக்பாஸ் ஒரு சம்பவத்தைச் செய்துள்ளார். இந்த சீசன் முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் போட்டியைச் சூடுபிடிக்க வைக்கும் வகையில் அடுத்து வரும் டாஸ்குகள் இருக்கும் என்பதற்கு இன்றைய நாளிற்கான ப்ரோமோகளில் தெளிவாகத் தெரிகிறது.

இன்றைய முதல் ப்ரோமோவில் மைனா போட்டியாளர் விக்ரமனை வெளுத்து வாங்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ள. அதாவது பிக்பாஸ் இன்று போட்டியாளர்கள் விவாதம் செய்யும் டாஸ்க்கை வழங்கியுள்ளார்.

அதில் மைனா விக்கிரமனைப் பார்த்து நீங்கள் எப்பொழுதும் நியாயம் பேசுவதாக நினைத்து உங்கள் கருத்தை மட்டும் தான் முன் வைத்து நியாயம் அநியாயம் என்று பேசிக்கொண்டு இருக்கிறீர்கள். அது எப்பொழுதும் சரியாக இருக்காது என்பதை போல் காரசார விவாதத்தில் ஈடுபடுகிறார்.

இதனைப் பார்த்த ரசிகர்கள் என்ன மைனாவா இது இப்படி விக்ரமனையே போட்டுக் கதற வைக்கிறார் என்று ஆச்சரியத்தில் உள்ளார்கள். மேலும் இந்த வாரம் வீட்டிற்குள் வந்த மைனாவின் கணவர் யோகி மண்டையில் உரைப்பதை போல் கூறிய அறிவுரை வேலை செய்வதாகவும் பலரும் இணையத்தில் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

அதன்பின் வெளியான இரண்டாவது ப்ரோமோவில் சண்டை மன்னன் அசீமிற்கும் அமைதியின் உருவம் ரச்சிதாவிற்கும் விவாதம் நடக்கிறது. இத்தனை நாட்கள் இருக்கும் இடமே தெரியாமல் இருந்த ரச்சிதா அசீமிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவதைப் பார்க்கும் பொழுது பிக்பாஸ் போட்டி இறுதிக் கட்டத்தை நெருங்கி விட்டதை உணர முடிகிறது.

அடுத்தாக கடைசி ப்ரோமோவில் வழக்கம் போல் அசீமிற்கும் விக்ரமனுக்கும் விவாதம் இல்லை சண்டை நடக்கிறது. உரையாடல் ஆரம்பித்ததோ அமுதவாணனிற்கும் விக்ரமனுக்கும் தான். ஆனால் சண்டை என்றால் நான் இல்லாமலா என்பதை உறுதி செய்யும் விதமாகக் களத்தில் இறங்கி அசீம் தனது வேலையை ஆரம்பித்து விட்டதைப் பார்க்க முடிகிறது.

பிக்பாஸ் இந்த வாரம் முழுவதும் போட்டியாளர்கள் அமைதியாக இருப்பதைப் பார்த்து எங்கே இவர்கள் சண்டைபோடுவதை மறந்து விடப் போகிறார்கள் விடக் கூடாது என்பதற்காகவே இந்த டாஸ்கை கொடுத்துள்ளதாகத் தெரிகிறது. ஆகா மொத்தத்தில் என்ன டாஸ்க் நடக்கிறது ஏன் சண்டை என்பதை அனைத்தையும் விவரமாக இன்றைய எபிஸோடை பார்த்துத் தெரிந்து கொள்வோம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்