ஜிகர்தண்டா 2 படத்தைப் பற்றி கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துள்ளார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். இதனால் ரசிகர்கள் விரைவில் இந்த படம் துவங்கும் என மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தமிழில் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படங்களில் ஒன்று ஜிகர்தண்டா 2. ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ஜிகர்தண்டா படத்தின் தொடர்ச்சி என்பதாலேயே இதன் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்து வந்தனர். ஆனால் இப்போது இது அந்த படத்தின் தொடர்ச்சி இல்லை. முற்றிலும் வேறு கதை என கூறியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ். இதனால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
ஜிகர்தண்டா முதல் பாகம் பெற்ற வெற்றியால் அதே பெயரைப் பயன்படுத்தியுள்ளனர் போல. படம் எப்படி இருக்கும் என்பது ஒருபக்கம் இருந்தாலும், படம் சீக்கிரம் துவங்கும் என்பதால் அதனை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் ரசிகர்கள் சிலர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…