பரியேறும் பெருமாள் படத்தில் நடித்த தெருக்கூத்துக் கலைஞர் நெல்லை தங்கராஜ் அவர்கள் உடல்நலக் குறைவால் இன்று அதிகாலை இயற்கையை எய்தினார்.
சமுதாயத்தில் நடக்கும் உண்மைகளை படமாக்கும் வகையில் தனது நடிப்பால் அனைவரையும் கவர்ந்து வந்தவர் தான் கதிர். இவர் நடித்த "பரியேறும் பெருமாள்" திரைப்படம் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தை சேர்த்தவர்கள் மேற்கொள்ளும் துன்பங்களை மிகவும் தத்ரூபமாக காண்பித்துள்ளனர். இப்படத்தை பா. ரஞ்சித் அவர்கள் இயக்கியுள்ளளார். இந்த படத்தில் பரியனின் தந்தையாக நடித்துள்ள நெல்லை தங்கராஜ் பெண் வேடமிட்டு தெருக்கூத்து கலைஞராக நடித்ததால் அனைவராலும் கவனிக்கப்பட்டார்.
அது மட்டும் இன்றி இவர் நிஜ வாழ்க்கையிலும் தெருக்கூத்து கலைஞராக வாழ்ந்து வந்தார். இவரின் வறுமையின் காரணமாக நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் இணைந்து இவருக்கு புதிய வீடு ஒன்றைக் கட்டித் தந்தனர். இந்த செய்தி அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. மேலும் இவரின் நடிப்பும் பரியேறும் பெருமாள் படத்தைப் பற்றியும் முதலவர் ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார். ஆனால் கடந்த சில நாட்களாக உடல் நலக் குறைவால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார். இன்று அதிகாலை 5 மணிக்கு மரணமடைந்தார். இவரின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…