தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்திற்கான தேர்தல் இன்று சென்னையில் நடந்த நிலையில், வாக்குகள் எண்ணப்பட்டு இயக்குனரும் நடிகருமான பாக்கியராஜ் வெற்றி பெற்றுள்ளார்.
இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்துக்கு தேர்தல் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், தற்போது உள்ள உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில், புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க இன்று தேர்தல் நடைபெற்றது.
தற்போது தலைவராக உள்ள இயக்குநர் கே.பாக்யராஜ் தலைமையில் ஒரு அணியும், இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிட்டது. இந்த தேர்தல் காலை 8 மணியில் இருந்து மாலை 4 மணி வரை, வடபழனியில் உள்ள திரை இசைக் கலைஞர்கள் சங்கத்தில் நடைபெற்றது.
பின்னர் வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் இயக்குனர் பாக்கியராஜ் தலைமையிலான அணி வெற்றி பெற்றுள்ளது.
இயக்குனர் பாக்கியராஜுக்கு ஆதரவாக 192 வாக்குகளும், இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் தலைமையிலான அணிக்கு 152 வாக்குகளும் கிடைத்தன. தேர்தல் வெற்றிக்கு பிறகு பேசிய, இதில் வெற்றி தோல்வி என்பது கிடையாது, அனைவரும் ஒன்று தான், வெற்றியை பரிசாக அளித்தவர்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…