முற்றிலும் புதுமையான கதையுடன் தென்றல் வந்து என்னை தொடும் தொடர் பல திருப்பங்களுடன் நடக்கிறது. கொலை பழியை ஏற்றுக்கொண்டு வெற்றி தன்னுடைய அண்ணிக்காக சிறைக்கு செல்கிறான். அந்த விரக்தியில் அபி தமிழ்நாட்டை விட்டு செல்கிறாள். 6 வருடங்களுக்கு பின்னர் வெற்றி வெளியே வந்து அபி தன்னுடைய குழந்தையை கலைத்து விட்டால் என்னும் செய்தியை கேட்டதால் மீண்டும் ரௌடியாக மாறி விட்டான்.
அபி ஆந்திர மாநிலத்தில் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வருகிறாள். இந்த சமயத்தில் அவளுக்கு காஞ்சிபுரத்திற்கு பரிமாற்றம் செய்யப்படுகிறாள். மிகுந்த குழப்பத்தில் இருக்கும் அபி வீட்டிற்கு செல்லும் போது சுடர் அபியின் குழந்தை பிடிவாதத்துடன் நடந்துகொள்கிறாள். அதற்கு பின்னர் இருவரும் தமிழ்நாட்டிற்கு செல்ல தயாராகிக் கொண்டிருக்கின்றனர். அந்த பக்கம் வெற்றி மாமுல் வாங்கிக்கொண்டிருப்பதை பார்த்து விட்டு ராதா அவனை கண்டிக்கிறாள். இருப்பினும் பிடி கொடுக்காததால் காவல் நிலையம் சென்று புகாரளிகிறாள்.
அபி காஞ்சிபுரத்திற்கு வருவதை தன்னுடைய தந்தையிடம் தெரிவிக்கிறாள். அப்படியே அங்கு வந்தாலும் யாரும் என்னையோ குழந்தையையோ பார்க்க வரக்கூடாது என்று சொல்கிறாள். இதனால் குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் கவலையில் இருக்கின்றனர். அடுத்து அபி மற்றும் வெற்றியின் பாதை ஒன்று சேறுமா, இருவரும் அனைத்து உண்மைகளையும் தெரிந்துக் கொள்வார்களா என்பதை பொறுத்திருந்து பாப்போம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…