அபராதம் விதிக்கப்பட்டது உண்மைதான். ஆனால் விஜய்க்கு அல்ல. நிகழ்ச்சி ஏற்பாட்டளர்களுக்குத் தான்.
வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் விஜய்யின் குட்டிக் கதைகள் நல்ல வரவேற்பை பெற்றன. இதுமட்டுமின்றி, வாரிசு படத்தில் இடம்பெற்ற அத்தனை பாடல்களும் மேடையில் இசைத்து பாடி காட்டப்பட்டது.
ரசிகர்கள் மிக அதிக அளவில் குவிந்திருந்த இந்த விழாவில், சில எதிர்பாராத சில முகம் சுளிக்கும் விசயங்களும் நடந்துள்ளன. ரசிகர்களில் சிலர் அரங்க நாற்காலிகளை அடித்து நொறுக்கி உடைத்துவிட்டு சென்றிருப்பதாக கூறப்படுகிறது.
வரும் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகவுள்ள வாரிசு திரைப்படத்தின், இசை வெளியீட்டு விழாவில் இந்த சம்பவங்களால் நேரு உள்விளையாட்டு அரங்க பொறுப்பு அதிகாரிகள் கடும் கடுப்பில் இருக்கிறார்களாம். நிகழ்ச்சிக்காக வந்தால், எப்படி கொடுத்தோமோ அப்படியேத்தான் திருப்பி தர வேண்டும். இது மக்கள் சொத்து எனும்படியாக வாரிசு படக்குழுவினரின்மீது வருத்தத்தில் இருக்கிறார்கள் போல.
இதுகுறித்து அவர்களிடம் கேட்டபோது, நிச்சயம் அபராதம் விதிக்கப்படும். தயாரிப்பு தரப்புதான் இதற்கு பொறுப்பு. சேதம் குறித்த உரிய கணக்கெடுப்பு நடத்திவிட்டு அதற்கான தண்டத் தொகையை அவர்களிடமிருந்து பெறுவோம் எனத் தெரிவித்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…