Pension Schemes in Tamilnadu: மக்களுக்கு உதவும் வகையில், பல்வேறு நலத்திட்ட பணிகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் செய்து வருகின்றன. அந்த வகையில் ஒன்று பென்சன் திட்டம். தற்போது முதலே சேமிப்பதன் மூலம், வயது முதிர்வு காலத்தில் யாரையும் சார்ந்திராமல் நிம்மதியான வாழ்க்கையைப் பெறலாம். அவ்வாறு, இதில் மிகுந்த பயனுள்ள திட்டமான ரூ. 60,000 பென்சன் வாங்கும் திட்டத்தைப் பற்றிக் காண்போம் (Atal Pension Yojana Scheme Details in Tamil).
வாழ்நாள் முழுவதும் மகிழ்வாகவும், நிம்மதியாகவும் வாழ்வதற்கு இந்தத் திட்டம் பெரிதும் உதவுபவையாக இருக்கும். இந்தத் திட்டத்தில் ஒவ்வொருவருக்கும் சேமிப்பு என்பது மிக முக்கியமாக இருக்க வேண்டிய ஒன்றாக உள்ளது. அதன் படி, ஒரு சிறப்பான பென்சன் திட்டம் ஒன்றைக் காண்போம். இதில், தினமும் ரூ. 7 செலுத்தி சேமிப்பதன் மூலம், ரூ. 60,000-ஐ பெறலாம். இந்தத் திட்டம் பற்றிய முழு விவரங்களையும், இதனை எவ்வாறு பெறலாம் என்பது பற்றியும் இந்தப் பதிவில் காணலாம் (Atal Pension Yojana Scheme).
அடல் பென்சன் யோஜனா திட்டம்
அடல் பென்சன் யோஜனா என்ற திட்டம் கடந்த 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதாகும். இது ஆரம்பத்தில் அமைப்பு சாரா துறைகளில் பணிபுரியும் மக்களுக்காகத் தொடங்கப்பட்டது. காலப்போக்கில் இந்த திட்டம் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் உரியதாக மாற்றப்பட்டுள்ளது (Atal Pension Yojana Scheme Details). குறிப்பாக 18 முதல் 40 வயதுடைய மக்கள் அனைவரும் இத்திட்டத்தில் இணைந்து பங்கு பெறுவர். எனவே, இந்தச் சிறப்பான திட்டத்தில் அனைவருமே முதலீடு செய்யலாம் எனக் குறிப்பிடப்படுகிறது (Atal Pension Yojana Eligibility).
சேமிப்பு தொடங்குவதற்கான ஆவணங்கள்
இந்த திட்டத்தில், பொதுமக்கள் சேமிப்பு வைத்துக் கொள்ள கீழ்க்காணும் ஆவணங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
திட்டத்தின் செயல்பாடுகள்
இந்த அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தின் கீழ், குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ. 1000-ம் அதிகபட்ச ஓய்வூதியமாக ரூ.5,000 வரையிலும் உத்திரவாதம் அளிக்கப்படுகிறது. இதுவே, இந்தத் திட்டத்தில் சேமித்து வைக்கும் சந்தாதாரர் இறந்து விட்டால், அவர்களின் நாமினி ஓய்வூதியம் பெறலாம் (Atal Pension Yojana Benefits).
இந்தத் திட்டத்தில் 60 வயதுக்குப் பின், சேமிப்புத் திட்டத்தில் இருந்த சந்தாதாரர் இறந்து விட்டால் அவரது இறப்பு சான்றிதழ், இந்த திட்டத்தில் இணைந்ததற்கான சான்றிதழ், சந்தாதாரர் மற்றும் நாமினியின் ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை பதிவு செய்யப்பட்ட வங்கிக் கிளையில் கொடுப்பதன் மூலம், வங்கி இந்த விவரங்கள் அனைத்தையும் PFRDA-வுக்கு அனுப்பும்.
அதில், இதற்கான விவரங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு, பென்ஷன் தொகை நாமினிக்கு வழங்கப்படும்.
முதலீடு செய்யப்படும் தொகை
இந்தத் திட்டத்தில் இணையும் சந்தாதாரர்கள் சேமிக்கும் தொகை அவர்களுக்கு 60 ஆண்டுகளுக்குப் பின்னரே ஆண்டு ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது.
அதன் படி, நாளொன்றுக்கு 7 ரூபாய் வீதம் மாதம் ரூ.210 செலுத்துவதன் மூலம், கடைசி காலத்தில் மாதம் ரூ.5000 ஓய்வூதியமாகப் பெறலாம். அதன் படி, ஆண்டு ஒன்றிற்கு ரூ.60,000 பெற முடியும் (Latest Government Pension Schemes in Tamilnadu).
மேலும், நாளொன்றுக்கு ரூ.7 சேமிப்பதன் மூலம், மாதம் ரூ. 5000 பெறுவதைப் போல, இத்திட்டத்தில் சேமிக்கும் தொகையினைப் பொறுத்து, ஓய்வூதியமும் மாறுபடும் (அடல் பென்ஷன் திட்டம் அட்டவணை).
அதன் படி, மாதம் ரூ. 168 சேமித்தால் கடைசி காலத்தில் ரூ. 4,000 ஓய்வூதியமும் (Atal Pension Scheme Details in Tamil), மாதம் ரூ. 126 சேமித்தால் கடைசி காலத்தில் ரூ. 3,000 ஓய்வூதியமும், மாதம் ரூ. 84 சேமித்தால் கடைசி காலத்தில் ரூ. 2,000 ஓய்வூதியமும், மாதம் ரூ. 42 சேமித்தால் கடைசி காலத்தில் ரூ. 1,000 ஓய்வூதியமும் பெற முடியும். இந்தத் திட்டம் அனைவருக்கும் பெரிதும் பயனளிக்கும். இதில் விருப்பம் உள்ளவர்கள் சேமித்துப் பயனடையலாம்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்....
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…