தூத்துக்குடியில் சொத்து தகராறு காரணமாக தங்கை மற்றும் தங்கை கணவரை ஓட ஓட விரட்டி கொலை செய்த அண்ணன் மற்றும் அவரது மகனின் வெறி செயல் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
தூத்துக்குடி அண்ணா நகர் 6வது தெருவை சேர்ந்தவர் ராம்குமார் லாரி டிரைவர் இவரது மனைவி மாரியம்மாள் அதே பகுதியில் வசித்து வரும் மாரியம்மாளின் அண்ணன் முருகேசன் என்பவர் வீட்டை விலைக்கு வாங்கி குடியிருந்து வருகிறார்.
இந்த வீட்டை விலைக்கு வாங்கியது தொடர்பாக மாரியம்மாள் குடும்பத்தினருக்கும் அவரது அண்ணன் முருகேசன் குடும்பத்தினருக்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்றிரவு முருகேசன் மற்றும் அவரது மகன் மகேஷ் இருவரும் அண்ணாநகர் 6வது தெருவில் வைத்து ராம்குமாரை ஓட ஓட விரட்டி கொலை செய்து விட்டு வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்த தங்கை மாரியம்மாளையும் இருவரும் சேர்ந்து கொலை செய்ய வருவதை அறிந்த மாரியம்மாள் வீட்டிற்கு உள்ளே ஓடி உள்ளார்.
முருகேசன் மற்றும் அவரது மகன் இருவரும் சேர்ந்து வீட்டிற்கு உள்ளேயே வைத்து மாரியம்மாளை சரமாரியாக வெட்டி படுகொலை செய்துள்ளனர். அதன் பின்னர் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். தகவல் அறிந்து வந்த தென்பாகம் போலீசார் உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தனி பிரிவு போலீசார் மெத்தன போக்காக செயல்பட்டு வருவதால் தூத்துக்குடி தென் பாகம் காவல் நிலையம் பகுதியில் தொடர் படுகொலை சம்பவம் அரங்கேரி வருவதாக வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
தூத்துக்குடியில் சொத்து தகராறு காரணமாக உடன் பிறந்த தங்கை மற்றும் அவரது கணவரை அண்ணன் மற்றும் அவரது மகன் சேர்ந்து வெட்டி படுகொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…