புது பைக் வாங்குவதற்காக பக்கத்து வீட்டில் பணம் திருடிய அண்ணன், தம்பி உள்ளிட்ட மூவர் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் மூலம் வசமாக சிக்கிய சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள பொந்துகம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி. பழ வியாபாரியான இவர் காலை வியாபாரத்திற்கு சென்று விட்டு இரவு வீடு திரும்புவது வழக்கம். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை வியாபாரத்திற்காக வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றவர் இரவு வந்து பார்த்தபோது வீட்டு கதவு திறந்து கிடந்துள்ளது, உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த 95 ஆயிரம் ரூபாய் பணம் திருடு போனது தெரியவந்தது.
இது தொடர்பாக முனிசாமி கொடுத்த புகாரின் பேரில் பாலமேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் முனுசாமியின் பக்கத்து வீட்டுக்காரரான சோனை என்பவரது 19 வயது இளைய மகன் வெள்ளைச்சாமி , புது பைக் வாங்குவது போன்று வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார். பணத்திற்கு சிரமப்படுவதாக சோனை கூறி வந்த நிலையில் அவரது மகனுக்கு புது பைக் வாங்க பணம் எப்படி வந்தது என சந்தேகமடைந்த முனுசாமி இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து பாலமேடு போலீசார் வெள்ளைச்சாமியை பிடித்து விசாரித்த போது வெள்ளைச்சாமியும் அவரது அண்ணன் சேது மற்றும் அவரது நண்பர் கேசவன் உள்ளிட்ட மூன்று பேரும் சேர்ந்து முனுசாமி வீட்டில் இல்லாத போது பீரோவில் இருந்த பணத்தை பணத்தை திருடியதாகவும், அந்த பணத்தில் 5 ஆயிரம் ரூபாயை புது பைக் வாங்குவதற்காக ஷோரூமில் முன்பனமாக செலுத்தி விட்டு இரண்டு தினங்களில் மீதி தொகையை செலுத்தி பைக் வாங்குவதற்கு திட்டமிட்டதும் தெரிவித்துள்ளனர்.
அதனை தொடர்ந்து மூன்று பேரையும் கைது செய்த பாலமேடு போலீசார் அவர்களிடம் இருந்து 90 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்த போலீசார், மூவரையும் வாடிப்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…