கேரளாவில் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக முடிக்கப்பட்ட வழக்கில் அவரது கணவனே கொன்றுவிட்டு நாடகமாடிய அதிர்ச்சி சம்பவம் 9 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகியுள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் நெய்மம் பகுதியைச் சேர்ந்தவர் அஸ்வதி என்ற பெண்மணி 9 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டில் உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டு சடலமாக மீட்கப்பட்டார். இந்த வழக்கில் விசாரணை நடத்திய உள்ளூர் போலீசார், அஸ்வதி தற்கொலை செய்து கொண்டதாக வழக்கை முடித்தனர். அப்போது அஸ்வதியின் கணவர் ரிதீஸ் இரண்டு கைகளிலும் தீக்காயம் இருந்ததுள்ளது. அதற்கு அவர் விசாரணையில், மனைவியை காப்பாற்ற முயற்சி செய்தபோது தனது கையில் தீக்காயம் ஏற்பட்டதாக தெரிவித்திருந்தார்.
இதனை போலீசார் ஏற்றுக்கொண்டாலும் அஸ்வதியின் உறவினர்கள் ஏற்கவில்லை. எனவே அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக காவல்நிலையத்தில் மீண்டும் புகார் அளித்துள்ளனர். இதனடிப்படையில் வழக்கானது புலனாய்வு போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வழக்கு தொடர்பான ஆவணங்கள் மற்றும் அஸ்வதியின் உடற்கூறு மருத்துவ ஆய்வு முடிவுகளை மீண்டும் விசாரணை நடத்தினார்.
இதையடுத்து அஸ்வதியின் கணவன் ரிதீஸ் மீண்டும் போலீசாரின் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டார். அப்போது நடத்தப்பட்ட விசாரணையில் நான் தான் மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து கொன்றேன் என ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து ரிதீசை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்
9 ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை என்று முடிக்கப்பட்ட வழக்கு விசாரணை தற்போது கொலை வழக்காக மாற்றப்பட்டு கணவர் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…