Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சீர்காழியில் நிறுத்தி வைத்திருந்த சொகுசு காரில் டயர்கள் திருட்டு

Baskarans Updated:
சீர்காழியில் நிறுத்தி வைத்திருந்த சொகுசு காரில் டயர்கள் திருட்டுRepresentative Image.

மயிலாடுதுறை: சீர்காழியில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு கார்களில் டயர்களை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தெற்கு வீதியில் வசித்து வருபவர் முத்துராமன். நகை வணிகம் செய்து வரும் இருவர் தனது சொகுசு காரை வீட்டின் வெளியில் நிறுத்தி வைத்துள்ளார். இவர் கடந்த வாரம் குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டு காரை சில நாட்களாக கவர் போட்டு மூடி வைத்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலையில் காரின் மூடியுள்ள கவரை திறந்து பார்த்த போது, மர்மநபர்கள் நான்கு டயர்களையும் கழட்டி விட்டு, கல்லை வைத்து முட்டுக் கொடுத்துள்ளது தெரியவந்தது. 

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காரின் டயர்களை திருடிச் சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர். மேலும் வீட்டின் அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை வைத்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு காரின் டயர்கள் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்