அவசர உலகில் இன்று இருக்கும் சமுக சீரழிவின் உச்சமாக நடப்பது அங்கெங்கே குழந்தை பெற்று எடுக்கும் பள்ளி மாணவி. பள்ளிப் பருவத்தில் ஏற்படும் பழக்கம் காதலாக மாறி பின் இப்படிப்பட்ட நிலையில் கொண்டு வந்துவிட்டுவிடுகிறது. இதுபோன்ற ஒரு பள்ளி மாணவி கர்ப்பமாக இருந்து வீட்டின் கழிவறையில் குழந்தை பெற்ற சம்பவம் தான் நிகழ்ந்துள்ளது. இந்த +2 மாணவியின் கர்ப்பத்திற்கு யார் காரணம் இந்த சம்பவத்தைப் பற்றி கீழே காண்போம்.
நடந்தது என்ன?
மதுரை மாவட்ட அலங்காநல்லூர் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயதான +2 மாணவிக்கு தான் குழந்தை பிறந்துள்ளது. ஆன்லைன் வகுப்பிற்காக இந்த மாணவியின் பெற்றோர் செல்போன் வாங்கி கொடுத்துள்ளனர், இவர் செல்போனில் இன்ஸ்டாகிராம் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த வெற்றி மணி (21) என்ற ஒரு இளைஞனுடன் காதல் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
நட்பாக ஆரம்பித்த உறவு காதலாக மாறி, அடிக்கடி தனிமை சந்திக்கும் அளவு நெருக்கமாகி உள்ளது. இவர்களின் நெருங்கிய உறவில் 17 வயது சிறுமி கர்ப்பமானதும், பிரசவ காலம் வரை வீட்டில் யாருக்கும் தெரியாமல் இருந்துள்ளார். இந்நிலையில் சிறுமிக்கு பிரசவ வலி ஏற்பட யாருக்கும் சொல்லாமல் வீட்டின் கழிவறையில் பெண் குழந்தையை பெற்று எடுத்துள்ளார். வீட்டில் இருந்த 17 வயதான சிறுமியைக் காணவில்லை என பெற்றோர் வீட்டில் தேடியபோது கழிவறையில் குழந்தையுடன் மயக்கத்தில் இருந்துள்ளார்.
தங்கள் குழந்தை வீட்டிலே குழந்தை பெற்றதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுமியிடம் விசாரித்துள்ளனர். பின் உண்மையை சிறுமி பெற்றோரிடம் திண்டுக்கல்லில் காய்கறி கடையில் வேலை செய்யும் வெற்றி மணி என்பவரிடம் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு தான் கர்ப்பமானதை கூறினார். இது தொடர்பாக மாவட்ட குழந்தை நல பாதுகாப்பு அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் வெற்றி மணியை சமயநல்லூர் மகளிர் போலீஸார் கைது செய்து உள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…