Sat ,May 11, 2024

சென்செக்ஸ் 72,664.47
260.30sensex(0.36%)
நிஃப்டி22,055.20
97.70sensex(0.44%)
USD
81.57
Exclusive

நிலத்தகராறு - அரிவாளோடு தாக்க பாய்ந்த பெண்! வைரல் வீடியோ..

Nandhinipriya Ganeshan October 08, 2022 & 11:32 [IST]
நிலத்தகராறு - அரிவாளோடு தாக்க பாய்ந்த பெண்! வைரல் வீடியோ..Representative Image.

திருவாரூர்:

திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே புதுக்குடி பகுதியைச் சேர்ந்தவர் கௌதமி. இவர் இரவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த அசாருதீன் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.

கௌதமியின் தந்தை ராஜேந்திரனுக்கு கல்யாணசுந்தரம் மற்றும் ஜெயராமன் என்ற இரண்டு சகோதரர்கள். இந்நிலையில், ஜெயராமன் நிலத்தில் ராஜேந்திரன் விவசாயம் செய்து வந்துள்ளார். தந்தை உயிரிழந்ததை தொடர்ந்து சொந்த ஊருக்கு சென்ற அவரது மகன் ஜெகன், ராஜேந்திரனிடம் நிலத்தை பெற்று தன்னுடைய பெயரில் பட்டாவை மாற்றியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், ராஜேந்திரனும் உயிரிழந்ததால் அவரது மகள் கௌதமி, தன்னுடைய நிலம் என்று கூறி ஜெகனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இந்த பிரச்சனை நீண்ட வருடங்களாக நடைபெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் கௌதமி மற்றும் அவருடைய கணவர் அசாருதீன், வயலில் வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது குடும்பத்தாருடன் வந்த ஜெகன், அவர்களோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஆபாச வார்த்தைகளில் திட்டி உள்ளார்.

இதனால் ஆத்திரம்அடைந்த கௌதமி மண்வெட்டியை கொண்டு அவர்களை தாக்க முயன்றுள்ளார். இதனை வீடியோவாக எடுத்து ஜெகன் குடவாசல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தற்போது இந்த காட்சி இணையத்தில் வைரலான நிலையில், ரகளையில் ஈடுபட்ட கௌதமி மற்றும் அவரது கணவர் அசாருதீன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்