World Yoga Day : உலக யோகா தினத்தை முன்னிட்டு இன்று அதிகாலை மைசூரு அரண்மனையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
உலகம் முழுவதும் ஜூன் 21ம் தேதி உலக யோகா தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி, இந்தியாவில் தொடங்கிய யோகா உடற்பயிற்சி முறை தற்போது பல நாடுகளிலும் மக்களால் பின்பற்றப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக யோகா தினம் இந்தியாவில் பிரம்மாண்டமாக நடைபெற வில்லை. ஆனால், இந்த ஆண்டு நாடு முழுவதும் யோகா தினம் பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. அதன்படி, மைசூரு அரண்மனையில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துக் கொண்டார்.
இதனையடுத்து, யோகா செய்த பின் பேசிய பிரதமர், “யோகா பயிற்சி உடல், மனம் இரண்டிற்கும் அமைதியை தருகிறது. சீராக வைத்திருக்க உதவுகிறது. உலகம் முழுவதும் பல மில்லியன் மக்கள் யோகா செய்வதன் மூலம் உலகளாவிய அமைத்திக்கான சூழலை உருவாக்கியுள்ளார்கள்.
யோகா பயிற்சியால்தான் மக்களையும், நாடுகளையும் ஒன்றிணைக்க முடியும். இந்த முழு பிரபஞ்சமும் நமது உடல் மற்றும் ஆன்மாவிலிருந்து தொடங்குகிறது. யோகா செய்வதன் மூலம் நமக்கு இருக்கும் அனைத்தையும் நம்மால் புரிந்து கொள்ள முடியும்” என கூறியுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…