Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மகாராஷ்டிரா மாநிலத்தில் நிலச்சரிவு.. 10பேர் பலி..

Baskaran. S Updated:
மகாராஷ்டிரா மாநிலத்தில் நிலச்சரிவு.. 10பேர் பலி..Representative Image.

மும்பை: மகாராஷ்டிராவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர்.

மகாராஷ்டிரா மாநிலம் ராய்கட் மாவட்டத்தில் பழங்குடியினர் அதிகம் பேர் வசிக்கும் பகுதியான இர்சல்வாடி என்ற இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. 

இதனால் அந்த பகுதியில் இருந்த 30-க்கும் மேற்பட்ட வீடுகள் மீது மண் மற்றும் பாறைகள் விழுந்தன. தகவல் அறிந்ததும் 150 மாநில பேரிடர் மீட்பு படை வீரர்கள் மற்றும் 500 மீட்பு படை வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியை ஆய்வு செய்தார்.

மீட்பு பணிக்கு உதவுவதற்காக ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர். இந்த சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இடிபாடுகளுக்குள் 100-க்கும் மேற்பட்டவர்கள் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அவர்களை மீட்கும் பணி துரிதப்படுத்தப்பட்டு உள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்