Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கள்ள ரூபாய் நோட்டுக்களை வைத்திருந்த 2 பேர் கைது...!

Muthu Kumar August 19, 2022 & 09:45 [IST]
கள்ள ரூபாய் நோட்டுக்களை வைத்திருந்த 2 பேர் கைது...!Representative Image.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தற்காலிக பேருந்து நிலையம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்னை பதிவெண் கொண்ட இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை நிறுத்தி விசாரணை செய்தனர். விசாரணையில் இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்ததை அடுத்து அவர்கள் வந்த இருசக்கர வாகனத்தை சோதனை செய்துள்ளனர்.

இந்நிலையில், சோதனை நடத்தியதில் கட்டுக்கட்டாக 500 ரூபாய் கள்ள நோட்டுகள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, அவர்களிடம் இருந்த 3 லட்சம் கள்ள ரூபாய் நோட்டுக்கள் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

மேலும், கள்ள நோட்டுகளை வைத்திருந்த சென்னையை சேர்ந்த நாகராஜன், சங்கரன்கோவிலை சேர்ந்த காஜா நஸ்முதீன் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்